தலைக்குனிவதா? (புதுக்கவிதை)

பேனாக்கள் குனிந்ததால்தான் 

‘அ’னாக்களும் ‘ஆ’வன்னாக்களும் வசமாயின.

ஒரு நல்ல செயல் செய்ய 

குனிவதில் தவறில்லை.

அதற்காக தலைக்குனிந்து  கொண்டே இருப்பதா?

என்று கேட்கலாம்.

வாக்கியம் முற்று பெற்றால் 

புள்ளிவைக்கத்தான் வேண்டும்.

புள்ளிவைத்தபின் பேனாவை 

நிமிர்த்தத்தானே வேண்டும்.

                                                   ——  அரங்க குமார்.

                                                                சென்னை – 600 049.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *