பேனாக்கள் குனிந்ததால்தான்
‘அ’னாக்களும் ‘ஆ’வன்னாக்களும் வசமாயின.
ஒரு நல்ல செயல் செய்ய
குனிவதில் தவறில்லை.
அதற்காக தலைக்குனிந்து கொண்டே இருப்பதா?
என்று கேட்கலாம்.
வாக்கியம் முற்று பெற்றால்
புள்ளிவைக்கத்தான் வேண்டும்.
புள்ளிவைத்தபின் பேனாவை
நிமிர்த்தத்தானே வேண்டும்.
—— அரங்க குமார்.
சென்னை – 600 049.