பாரதியின் வழியில் …

 மகாகவி சுப்ரமணிய பாரதியார்
Maha Kavi Subramaniya Bharathiyar

    யாமறிந்த  புலவரிலே  கம்பனைப்போல்,                                                             –  வள்ளுவர்போல்

        இளங்கோ வைப்போல்,

பூமிதனில்   யாங்கணுமே   பிறந்ததில்லை,                   -உண்மைவெறும்

புகழ்ச்சி யில்லை,

ஊமையராய்ச்  செவிடர்களாய்க்   குருடர்களாய் -வாழ்கின்றோம்

ஒருசொற் கேளீர்!

சேமமுற  வேண்டுமெனில்  தெருவெல்லாம் -தமிழ்முழக்கம்

                                 செழிக்கச் செய்வீர்!……………………….   1

 

பிறநாட்டு   நல்லறிஞர்   சாத்திரங்கள்   தமிழ்மொழியிற்

 பெயர்த்தல் வேண்டும்

இறவாத   புகழுடைய   புதுநூல்கள்   தமிழ்மொழியில்

இயற்றல் வேண்டும்

மறைவாக   நமக்குள்ளே   பழங்கதைகள்  சொல்வதிலோர்

மகிமை   இல்லை

திறமான   புலமையெனில்  வெளிநாட்டோர் -அதைவணக்கஞ்

                                           செய்தல்  வேண்டும்.  …………………………….. 2

 

உள்ளத்தில்   உண்மையொளி  யுண்டாயின்   வாக்கினிலே

ஒளியுண்  டாகும்

வெள்ளத்தின்  பெருக்கைப்போல்  கலைப்பெருக்கும் -கவிப்பெருக்கும்

மேவு  மாயின்

பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்  -விழிபெற்றுப்

பதவி  கொள்வார்,

தெள்ளுற்ற   தமிழமுதின்   சுவைகண்டார்  இங்கமரர்

                                               சிறப்புக்   கண்டார்……………………………. 3

 

யாமறிந்த  மொழிகளிலே  தமிழ்மொழிபோல் -இனிதாவது

எங்கும்  காணோம்,

பாமரராய்    விலங்குகளாய்,   உலகனைத்தும் -இகழ்ச்சிசொலப்

பான்மை  கெட்டு,

   நாமமது   தமிழரெனக்  கொண்டு இங்கு   வாழ்ந்திடுதல்

நன்றோ?  சொல்லீர்!

 தேமதுரத்    தமிழோசை  உலகமெலாம்   பரவும்வகை

                                    செய்தல்   வேண்டும்…………………………… 4

 

மகாகவி சுப்பிரமணிய பாரதியார் .

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *