வெளிச்சம் (புதுக்கவிதை)
உள்ளம் இருண்டவர்களுக்கு
வெளிச்சம் பிடிக்காது.
சோம்பேறிகளுக்கு
வெளிச்சம் பிடிக்காது.
வேசிகளுக்கு
வெளிச்சம் பிடிக்காது.
கள்ளர்களுக்கு
வெளிச்சம் பிடிக்காது.
விஷமுள்ளவைகளுக்கு
வெளிச்சம் பிடிக்காது.
கொடிய விலங்குகளுக்கு
வெளிச்சம் பிடிக்காது.
வண்ணத்துப் பூச்சி போன்ற
சிலவற்றைத் தவிர
பூச்சிகளுக்கு
வெளிச்சம் பிடிக்காது.
நல்லவை புரிய
வெளிச்சம் தேவை.
மனத்திலும் தான்!
— அரங்க. குமார்
சென்னை – 49.