அட நாயே!
நீ இந்த
ஏழைக் குடிசையில்
எதைக் காப்பாற்ற
இரவெல்லாம் குரைக்கிறாய்?
உனக்குச் சோற்றைப் போட்டதற்கு
எங்களுக்கு இருக்கின்ற
ஒரேசொத்தான
தூக்கத்தையும் அல்லவா
கொள்ளை போகவிடுகிறாய்!
என்று
நாளெல்லாம் உழைத்துக்
களைத்துப் படுத்திருந்த
அந்த கூலிக்காரன் புலம்பினான்!
—-அரங்க. குமார்
சென்னை- 600 049.