வண்ணத்துப் பூச்சி (புதுக்கவிதை)

வண்ணத்துப் பூச்சி 

 

கூட்டுப் புழுவொன்று

வயசுக்கு வந்ததில்

தாவணி போட்டுக்கொண்டது.

வண்ணத்துப் பூச்சி ஆனது.

வண்ணத்துபூச்சியை யாரும்

கட்டுப்படுத்தவில்லை.

கட்டுப்படவுமில்லை.

கூட்டை விட்டு வெளியில்வந்த

வண்ணத்துப் பூச்சி உலகைப் பார்த்து வியந்தது.

அதற்கு மலரும் மணமும்  பிடித்துப் போனது.

அதோ அந்த சிவப்பு மலர்!

இதோ இந்த நீல மலர்!

அதோ அங்கே வெள்ளை மலர் என்று

மலருக்கு மலர் தாவியது.

அது மிகவும் இலேசாக இருந்ததால்

எந்த மலருக்கும் துன்பம் விளையவில்லை.

அதற்கு யாருக்கும் துன்பம் செய்யத் தெரியவில்லை.

அதற்கு வெட்டி முறிக்கும் வேலைகளில்லை.

அதற்கு எந்த சாதனைகளும்

புரியவேண்டிய அவசியமில்லை.

அதன் தேவை மிகவும் சிறியது.

வண்ணத்துப்பூச்சி மகிழ்ச்சியின் சின்னமாயிருக்கும்

அதன் இறக்கைகளை யாரும் பிய்த்துப் போடாத

வரையில்.

 

                                              ————- அரங்க குமார்.

                                                             சென்னை – 600 049.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *