அடுத்த வினாடி என்ன நடக்கப் போகிறது
என்று அறியாமல் வாழும் மானுட வாழ்க்கையே
ஒரு ஆட்டம் தான்.
இதில் சூது கிடையாது.
இதை இயற்கை என்றும் கூறலாம்.
இறைவனுடைய திருவிளையாடல் என்றும் கூறலாம்.
இன்று மனிதன் கண்டு பிடித்த ஆட்டங்கள் பலவாயிரம்.
ஒரு சகுனியின் சூதாட்டம்
மகாபாரதத்தில் போரைத் தருவித்தது.
பலகோடி உயிர்களைப் பலிகொண்டது.
இன்று பலவாயிரம் சகுனிகள் சூதாடுகிறார்கள்.
அரசியல் சூதாட்டம்
மக்களைப் பலி வாங்குகிறது.
விளையாட்டில் சூதாட்டம்
மக்களை மடையர்கள் ஆக்குகிறது.
நேருக்கு நேராக ஆடும் சூதாட்டம்
பல குடும்பங்களை நடுத் தெருவிற்கு கொண்டுவந்தன.
இன்று மாயச் சகுனிகள் எங்கோ இருக்கிறார்கள்.
சூதாட்டம் தொலை பேசியில் வலைத்தளங்களில்
நடைபெறுகிறது.
அன்று சூதாட்டத்தின் முடிவை மாற்றி அமைக்க
கண்ணன் வந்தான்.
இன்று எந்த கண்ணன் வரப் போகிறான்.?
—– அரங்க குமார்.
சென்னை- 600 049.