தமிழனாக்கினாய் ! (புதுக்கவிதை)
அன்பே!
என் காதலை
கவிதையாக்கிச் சொன்னேன்!
நீயோ
நான் எப்பொழுது
பிழையில்லாமல்
கவிதை எழுதுகிறேனோ
அப்பொழுது
என் காதலை
ஏற்றுக் கொள்வதாகக்
கூறிவிட்டாய்.
இன்று
நான் தமிழாசிரியன்
ஆகிவிட்டேன்!
நீயோ
உன் பிள்ளைக்குத்
தமிழ் கற்றுத் தரச்சொல்லி
வந்து நிற்கிறாய்!
———– அரங்க. குமார்.
சென்னை – 600 049.