- நாய்ப் பாசம்
நாய்ப் பாசம்
“இங்கே உட்கார்ந்து கொண்டு இரும்மா
உனக்கு நான் டிபன் வாங்கிக் கொண்டு
வருகிறேன்” என்று தாயை
சித்தூரில் தொலைத்துவிட்டு
செங்கல்பட்டு வந்து விட்ட மகனிடம்
அவன் மனைவி
அழுது கொண்டே சொன்னாள்
” நம் நாய் ஜிம்மியைக் காணோம்” என்று.
“அவன் எங்காவது போயிருப்பான்.
தானாய் வந்துவிடுவான்” என்ற கணவனிடம்
“அவனை நான் நாயாகவா வளர்த்தேன்.
என் சொந்தப் பிள்ளையைப் போலல்லவா வளர்த்தேன்”
என்று அழுதாள்.
“கவலைப்படாதே! அவனைக் கண்டுபிடித்து
கொடுப்பவர்களுக்கு ரூபாய் 5000/- பரிசு
என்று இந்த ஊர் முழுவதும்
அறிக்கை ஒட்டிவிடுகிறேன்”
என்றான் பாசமுள்ள கணவனாக.
——- அரங்க. குமார்.
சென்னை – 600049.