நாய்ப் பாசம்

நாய்ப் பாசம்

நாய்ப் பாசம்

நாய்ப் பாசம்

 

இங்கே உட்கார்ந்து கொண்டு இரும்மா

உனக்கு நான் டிபன் வாங்கிக் கொண்டு

வருகிறேன்”  என்று தாயை

சித்தூரில் தொலைத்துவிட்டு

செங்கல்பட்டு வந்து விட்ட மகனிடம்

அவன் மனைவி

அழுது கொண்டே சொன்னாள்

நம் நாய் ஜிம்மியைக் காணோம்” என்று.

அவன் எங்காவது போயிருப்பான்.

தானாய் வந்துவிடுவான்” என்ற கணவனிடம்

அவனை நான் நாயாகவா வளர்த்தேன்.

என் சொந்தப் பிள்ளையைப் போலல்லவா வளர்த்தேன்”

என்று அழுதாள்.

கவலைப்படாதே! அவனைக் கண்டுபிடித்து

கொடுப்பவர்களுக்கு ரூபாய் 5000/- பரிசு

என்று இந்த ஊர் முழுவதும்

அறிக்கை ஒட்டிவிடுகிறேன்”

என்றான் பாசமுள்ள கணவனாக.

                                    ——- அரங்க. குமார்.

                                           சென்னை – 600049.


 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *