நம்பிக்கை மரம் [ புதுக்கவிதை ]

நம்பிக்கை மரம் [ புதுக்கவிதை ]


கடந்து செல்லும்

மேகங்களைக் குறித்துக்

கவலைப் படவேண்டாம்.

மழை தரும் மேகங்கள்

வந்து கொண்டுதான் இருக்கும்.

காத்திருத்தல் கொடுமையானது.

காத்திருந்தால் இனிமையாகும்.

பயிர்கள் நம் நிழலில் வளர்பவை.

தினந்தினம் சீராட்டவேண்டும்.

மரங்கள் நமக்கு

நின்று பலன் தருபவை.

நம் பாட்டன் மரம் வளர்த்திருந்தால்

நாம் நிழலில் இருப்போம்.

நாம் மரம் வளர்த்தால்

நம் தலைமுறை நிழலில் இருக்கும்.

மழை தரும் மேகங்கள் வரும்வரை

நாம் மரங்களை நட்டுவிட்டு

காத்திருப்போம்.

மரங்களைக் காத்திருப்போம்.

மரங்கள் நம்பிக்கையானவை!

 

                                                                                                                                         

----- அரங்க. குமார்

சென்னை- 49.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *