சேலைப் பெண்ணே!(புதுக்கவிதை )

சேலைப் பெண்ணே!

துணிக்கடையில்

வண்ணங்களில் எண்ணம்

தொலைக்கும் பெண்ணே!

சேலையை எடுப்பதற்கு

ஏன் இவ்வளவு

மெனக்கெடுகிறாய்

என்று யோசித்தேன்.

இந்த வண்ணச்சேலையில்

உன் எண்ணம் புரிகிறது.

சேலை

உன் இடையைச் சுற்றி சுற்றி

ஆசை தீராது

உன்மேல் படர்ந்து

உன் பின்னலோடு

போட்டிப் போட்டு

உன் பின்னழகைத் தொடுகிறது.

சேலைக்குத்தான் உன்மேல்

எவ்வளவு இச்சை அதிகம்.

அதைவிட சேலையில்

உன்மேல் எனக்கு இச்சை அதிகம்.

—————அரங்க. குமார்
சென்னை – 600049

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *