மாய உலகம் [ புதுக்கவிதை ]

மாய உலகம் [ புதுக்கவிதை ]

 

இதழையும்

இடையையும்

நடையையும்

சாதாரண கண்களாயிருந்த

சனங்களின் கண்களை

எக்ஸ்ரே கண்களாக்கிவிட்ட

அரிய சாதனம்.

 

பத்து வயதுப் பையனின்

சிந்தனையைத் தூண்டும் பள்ளியறை.

 

கொலை கொள்ளை கற்பழிப்பு

ஆகியவற்றை

செய்முறை விளக்கத்தோடு காண்பித்து

இவை தவறானவை

என்று முடிவு எழுதும்

ஆய்வுக்கூடம்.

 

காந்தியையும்

சம்பல் கொள்ளைக்காரியையும்

மக்கள் முன்னே நிறுத்திய

நியாயத் தராசு.

 

மனிதர்களைதெய்வ மாக்கிய

மாய உலகம்.

            ———–அரங்க. குமார்

                         சென்னை – 600 049.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *