பேதங்கள் ( புதுக்கவிதை)

பேதங்கள்  

 

ஆணென்றும் பெண்ணென்றும்

பேதங்கள் செய்வித்த

ஆண்டவனைப் போற்றவேண்டும்.

அதனால்

இல்லாததைக் கண்டு

இல்லாததைத் தேடும்

காதல்நோய்  பிறந்தது.

எனக்கு வந்த நோயை நீ தீர்ப்பாய்.

உனக்கு வந்த நோயை நான் தீர்ப்பேன்

என்ற சமரசம் பிறந்தது.

பேதங்கள் இல்லையென்றால்

சமரசம் எதற்கு.

                            ———-அரங்க. குமார்

                                         சென்னை – 600049

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *