நண்பன்
சுடரைத் தூண்டிவிடும் கைகள்;
விளக்கின் உள்ளிருக்கும் எண்ணெய்;
அணைந்து போகாமல்
அணைத்து நிற்கும் கரங்கள்;
சுடரின் உள்ளிருக்கும் இருளை
பெரிதுபடுத்தாத மனம்;
என்னைத் தொட்டபோது சுட்டதுண்டு;
சுட்டபோதும் அணைத்ததில்லை;
அவன் என் நண்பன்.
———— அரங்க. குமார்
சென்னை – 600 049