நண்பன் (புதுக்கவிதை)

 நண்பன் 

 

சுடரைத் தூண்டிவிடும் கைகள்;

விளக்கின் உள்ளிருக்கும் எண்ணெய்;

அணைந்து போகாமல்

அணைத்து நிற்கும் கரங்கள்;

சுடரின் உள்ளிருக்கும் இருளை

பெரிதுபடுத்தாத மனம்;

என்னைத் தொட்டபோது சுட்டதுண்டு;

சுட்டபோதும் அணைத்ததில்லை;

அவன் என் நண்பன்.

 

                                  ———— அரங்க. குமார்

                                                 சென்னை – 600 049

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *